கருப்பு பூஞ்சை தொற்றுக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து தேவையை விட அதிகமாகவே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாம் அலையின் பொழுது நாடு முழுவதும் பலருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. கறுப்பு பூஞ்சை தொற்றுக்கு ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்பட்டதால், அந்த மருந்துக்கான தேவை அதிகரித்தது. பலர் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனாவால் பாதிப்படைந்து கருப்பை பூஞ்சை தொற்றால் அவதிப்பட்ட நிலையில் மருத்துவர்கள் ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரை செய்ததன் விளைவாக அதன் தேவையும் அதிகரித்தது.
ஆனால் ரெம்டெசிவிர் மருந்தின் இருப்பு குறைவாக இருந்த காரணத்தால் 40 புதிய உற்பத்தி மையங்களை தொடங்கி உற்பத்தியை அதிகரிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உரிமம் வழங்கியது. இந்நிலையில், கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் ஒரு கோடியே 22 லட்சம் ரெம்டெசிவிர் மருந்து குப்பிகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தற்போதும் 62 மையங்களில் ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்த மருந்தின் தேவையை விட இந்த மருந்து உற்பத்தி அதிகமாகி உள்ளது எனவும், அது மட்டுமல்லாமல் கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இந்த மருந்துகளை எப்படி பகிர்ந்து அளிப்பது என்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…