கொரோனா நோயாளிகளுக்காக 100 டன் ஆக்சிஜனை இலவசமாக கொடுத்த ரிலையன்ஸ் நிறுவனம்!

Published by
Rebekal

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொரோனா  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதை அறிந்து 100 டன் ஆக்சிஜன் சிலிண்டரை இலவசமாக வழங்குவதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது மிகவும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவை இல்லாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் கொரோனாவின் பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் மகாராஷ்டிராவில் எவ்வித கட்டணமும் இன்றி 100 டன் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நகர அபிவிருத்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் இதை உறுதிப்படுத்தியுமுள்ளார். கொரோனாவிற்கு எதிரான போரில் முகேஷ் அம்பானி தனது நிறுவனம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செய்யும் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தான் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago