கொரோனா நோயாளிகளுக்காக 100 டன் ஆக்சிஜனை இலவசமாக கொடுத்த ரிலையன்ஸ் நிறுவனம்!

Published by
Rebekal

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கொரோனா  நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு இருப்பதை அறிந்து 100 டன் ஆக்சிஜன் சிலிண்டரை இலவசமாக வழங்குவதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது மிகவும் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள அரசுகள் தங்கள் மாநிலத்தில் உள்ள நோயாளிகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் சிலிண்டர் உள்ளிட்டவை இல்லாமல் திணறி வருகின்றன. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்திலும் கொரோனாவின் பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரக்கூடிய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவர்களின் ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் மகாராஷ்டிராவில் எவ்வித கட்டணமும் இன்றி 100 டன் ஆக்சிஜன் சிலிண்டர் வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் நகர அபிவிருத்தி அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்கள் இதை உறுதிப்படுத்தியுமுள்ளார். கொரோனாவிற்கு எதிரான போரில் முகேஷ் அம்பானி தனது நிறுவனம் சார்பில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு செய்யும் இந்த உதவிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து தான் ஆக்சிஜன் வழங்கப்படுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

2 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

3 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

4 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

5 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago