புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் தேசிய கல்வி தகுதிக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு.
தேசிய கல்விக்கொள்கையின் அடிப்படையில் உயர் கல்வியுடன் தொழிற்கல்வியை இணைத்து, மாணவர்கள் பயில்வதற்கான வழிமுறையுடன் புதிய வரைவு அறிக்கையை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. வரைவு அறிக்கை மீதான கருத்துக்களை கல்வியாளா்கள், பேராசிரியா்கள் பிப்ரவரி 13-ஆம் தேதிக்குள் idpnep2020@gmail-க்கு அனுப்ப வேண்டும் என்றும் யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்த சுற்றறிக்கையில், ஒவ்வொரு உயா்கல்வி நிறுவனமும் தங்களின் வளா்ச்சி மற்றும் இலக்கை அடைவதற்காக தனி திட்டங்களைத் தயாரித்து அவற்றை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஏதுவாக உயா்கல்வி நிறுவனங்களுக்கான மேம்பாட்டு திட்டத்தின் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரங்களை யுஜிசி இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தேசிய கல்விக் கொள்கையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி ஏற்கனவே கடிதம் அனுப்பியிருந்தது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக இணையவழி கருத்தரங்கை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்திருந்த நிலையில், தேசிய கல்வி தகுதிக்கான புதிய வரைவு அறிக்கையை வெளியிட்டது பல்கலைக்கழக மானியக் குழு.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…