கொரோனாவால் இறந்தவரின் சடலத்தை ஆற்றில் வீசிய உறவினர்கள்..!

Published by
Sharmi

கொரோனாவால் இறந்தவரின் உடலை பாலத்தின் மீது நின்று ஆற்றில் வீசிய உறவினர்கள்.

உத்திர பிரதேசம் மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த ஒருவரின் உடலை கோட்வால் என்ற இடத்தில் ராப்தி ஆற்றின் பாலத்தில் உறவினர்கள் இருவர் நின்றுகொண்டு ஆற்றில் வீசியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவம் குறித்து பல்ராம்பூர் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதன்படி, இறந்தவர் பிரேம்நாத் என்றும் அவர் சோக்ராத்பேட்சித்ரதா என்ற நகரில் வசிப்பவர் என்றும் கண்டுபிடித்துள்ளனர். பிரேம்நாத் என்பவர் கடந்த 25 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக பல்ராம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளார். மேலும், இவர் 28 ஆம் தேதியன்று இறந்ததாக மருத்துவமனையில் தெரிவித்துள்ளனர். அதன்பிறகு, பிரேம்நாத்தின் உடலை புதைக்கும் படி அவரின் உறவினர்களிடம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், உறவினர்கள் அவரின் உடலை ஆற்றில் வீசியுள்ளதாக மருத்துவமனை மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனாவால் இறந்தவரின் உடலை ஆற்றில் வீசியுள்ள இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Sharmi

Recent Posts

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

குக் வித் கோமாளி 5 : அடுத்த தொகுப்பாளர் யார்? வெளியான ப்ரோமோ!

சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…

9 mins ago

2025 ஆஸ்கர் விருது: போட்டியில் ‘வாழை’ உள்ளிட்ட 6 தமிழ் திரைப்படங்கள்!

டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…

34 mins ago

“நாம தான் முட்டாள் ஆயிருவோம்”! மணிமேகலை-பிரியங்கா சர்ச்சையை குறித்து பேசிய KPY சரத்!

சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…

1 hour ago

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை.! காவல்துறை விளக்கம்.!

சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…

1 hour ago

ரஷ்ய சர்வதேச மேடையில் ஒலித்த தமிழ்.. கொட்டுக்காளிக்கு குவியும் விருது.!

சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…

1 hour ago

சிறகடிக்கஆசை சீரியல்- முத்துவின் ரூமில் மாட்டிக்கொள்ளும் ரோகிணி ..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…

2 hours ago