பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும் என தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் கூட்டணி தொடர்பான முயற்சிகள் தொடங்கியுள்ளன. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், அதன் ஒரு பகுதியாக ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக்கை சந்தித்து பேசினார்.
பின்னர் நவின் பட்நாயக்குடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த சந்திர சேகர ராவ், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸுக்கு மாற்றாக பிராந்திய கட்சிகள் உருவெடுக்க வேண்டும் என்றும் பிராந்திய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்றாவது அணி தொடர்பாக, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரை சந்திரசேகர ராவ் சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…