மும்பையின் செம்பூரில் உள்ள என்.ஜி.ஆச்சார்யா மற்றும் டி.கே.மராத்தே கல்லூரியின் சீருடைக் கட்டுப்பாடு காரணமாக ஹிஜாப் அல்லது பர்தா அணிந்த மாணவிகள் வளாகத்திற்குள் நுழைவதற்கு தடை விதித்தது. இதனால் மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கல்லூரி வாயில் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த போராட்டத்தின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்தன. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதன் பிறகு நிலைமை கட்டுக்குள் வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து கல்லூரி முதல்வர் வித்யா கௌரி லெலே கூறுகையில், இந்த ஆண்டு எங்கள் கல்லூரியில் புதிய ஆடைக் கட்டுப்பாடு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கான விதிமுறைகள் பெற்றோருக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும், மே 1ம் தேதி, புதிய ஆடைக் கட்டுப்பாட்டைப் பற்றி விவாதிக்க பெற்றோருடன் ஆலோசனை நடத்தினோம். அதில் புர்கா, ஹிஜாப், தாவணி அணியத் தடை என நாங்கள் தெரிவித்தோம். அப்போது அனைவரும் ஆடை விதியை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இப்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அல்லது பர்தா அணிந்து வீட்டை விட்டு வெளியேறுவது பாதுகாப்பு மற்றும் தங்களுக்கு ஒரு மத பழக்கம், எனவே இந்த கட்டுப்பாடு தங்களுக்கு சங்கடமாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், தங்கள் வசதிக்காக தாவணி அணிவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…