ரெட் அலர்ட்.. அதீத கனமழை.. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு எச்சரிக்கை…

Default Image

மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிக்கு நாளை ரெட் அலர்ட் -இந்திய வானிலை ஆய்வு மையம்.

கர்நாடக மாநிலத்தில் பல்வேறு இடஙக்ளில் கனமழை பெய்து வருவதால், பல்வேறு இடங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக காலையில் செய்திகள் வெளியாகின.

தற்போது வெளியான தகவலின் படி, கர்நாடகா மட்டுமின்றி, தெலுங்கானா, கோவா, குஜராத், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஜூலை 7 (இன்று) முதல் ஜூலை 9 வரையில் அதீத கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள்ளது.

மேலும், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருபப்தாக கூறி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 7 (இன்று) முதல் ஜூலை 11 வரையில் சண்டிகர் மற்றும் தெற்கு ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கையையும், மும்பை, தானே மற்றும் பால்கர் பகுதிக்கு நாளை சிவப்பு நிற எச்சரிக்கையான ரெட் அலர்ட்-ஐயும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்