மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவகால மழை தொடர்ந்து பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் உருவாகியுள்ளது. மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகியவற்றுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் 2,000 க்கும் மேற்பட்டோர் தங்குமிடம் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளத்தில் சிக்கி மேலும் ஐந்து இறந்ததால், மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
சாலியார் நதி நிரம்பி வழிகின்றதையடுத்து, நீரில் மூழ்கிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து மலப்புரத்தில் உள்ள நிலம்பூர் வெள்ளத்தில் மூழ்கியது.மேலும், எர்ணாகுளத்தில் உள்ள நேரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு காட்டு யானை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
திரிசூரில், பலத்த காற்று மற்றும் பலத்த மழை காரணமாக மாவட்டங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தது, இதனால் மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…