மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவகால மழை தொடர்ந்து பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் உருவாகியுள்ளது. மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகியவற்றுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் 2,000 க்கும் மேற்பட்டோர் தங்குமிடம் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளத்தில் சிக்கி மேலும் ஐந்து இறந்ததால், மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
சாலியார் நதி நிரம்பி வழிகின்றதையடுத்து, நீரில் மூழ்கிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து மலப்புரத்தில் உள்ள நிலம்பூர் வெள்ளத்தில் மூழ்கியது.மேலும், எர்ணாகுளத்தில் உள்ள நேரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு காட்டு யானை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
திரிசூரில், பலத்த காற்று மற்றும் பலத்த மழை காரணமாக மாவட்டங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தது, இதனால் மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…