மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் பருவகால மழை தொடர்ந்து பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. பலத்த மழை காரணமாக வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் உருவாகியுள்ளது. மலப்புரம், வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகியவற்றுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கேரளாவில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் 2,000 க்கும் மேற்பட்டோர் தங்குமிடம் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளத்தில் சிக்கி மேலும் ஐந்து இறந்ததால், மொத்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
சாலியார் நதி நிரம்பி வழிகின்றதையடுத்து, நீரில் மூழ்கிய பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டதையடுத்து மலப்புரத்தில் உள்ள நிலம்பூர் வெள்ளத்தில் மூழ்கியது.மேலும், எர்ணாகுளத்தில் உள்ள நேரியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு காட்டு யானை ஆற்றில் அடித்து செல்லப்பட்டது.
திரிசூரில், பலத்த காற்று மற்றும் பலத்த மழை காரணமாக மாவட்டங்களில் மரங்கள் அடியோடு சாய்ந்தது, இதனால் மின்சாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நடிகர் அஜித் நடித்துள்ள 'விடாமுயற்சி' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸாகியுள்ளது. இதையொட்டி காலை முதலே அஜித்…
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35…
சென்னை : இன்று (பிப்ரவரி 6) அஜித் குமார் நடிப்பில் தயாராகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகியுள்ளது. மகிழ்…
சென்னை : பட்ஜெட்டுக்கு பிறகு தங்கம் விலை சரியக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக விலை கணிசமாக அதிகரித்துள்ளது.…
திருவண்ணாமலை : நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் சாதி, பணம் மற்றும் பொதுச்செயலாளருக்கு யார் விஸ்வாசமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு…
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள்…