மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார், ஆனால் தங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் பல விவசாயிகள் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டம் குறித்த மத்திய அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற நிலையில், எந்த பேச்சுவார்த்தையிலும் இதற்கு தீர்வு எட்டப்படவில்லை. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாய சங்க தலைவர் ராகேஷ் கூறுகையில், மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளதாகவும், ஆனால் தங்களது கோரிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…