Categories: இந்தியா

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

Election2024: மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இதில் முதல்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் நடைபெற்றது. இதன்பின் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் கடந்த 26ம் தேதி நடைபெற்று நிறைவு பெற்றது.

இந்த சூழலில் மணிப்பூரில் இரண்டாம் கட்ட தேர்தலின்போது 6 வாக்குச்சாவடிகளில் வன்முறை வெடித்ததால் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்டது. உக்ருல், சேனாபதி, ஷங்ஷாக், சிங்காய், கரோங்க, ஒயினாம் ஆகிய 6 வாக்குச்சாவடிகளில் பல்வேறு இடையூறுகள், அச்சுறுத்தல் ஏற்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்பின் அந்த 6 வாக்குச்சாவடிகளிலும் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி, மணிப்பூரில் வன்முறை வெடித்த 6 வாக்குச்சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் மறுவாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மீண்டும் வன்முறை வெடிக்காத வகையில் பலத்த ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

அங்கு மாலை 4 மணி வரை வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. இதனிடையே மணிப்பூரில் முதற்கட்ட தேர்தலின்போது துப்பாக்கிச் சூடு, வாக்குப்பதிவு இயந்திரங்கள் அழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததால் 11 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், தற்போது 2ம் கட்ட தேர்தலிலும் வன்முறை வெடித்ததால் இன்று 6 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

செங்கோட்டையன் மீண்டும் டெல்லி பயணம்? அதிமுக கூட்டணிக்கு பாஜக முயற்சி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில், தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…

24 minutes ago

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

1 hour ago

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…

2 hours ago

குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…

3 hours ago

தோனி இருக்கும்போது சென்னையை கட்டுப்படுத்திட்டாரு! ரியான் பராக்கை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா!

குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…

3 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…

4 hours ago