மேற்கு வங்கம்: நாடு முழுவதும் உள்ள 543 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த தேர்தல் கடந்த ஜூன் 1ஆம் தேதியுடன் நிறைவுபெற்றது. நாளை (ஜூன் 4) மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் பதற்றமான வாக்குச்சாவடிகள் அதிகம் இருப்பதால் அங்குள்ள 42 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களிலும் தேர்தல் நடைபெற்று வந்தது. இருந்தும் சில இடங்களில் ஆளும் கட்சி, எதிர்கட்சியினர்கள் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக குறிப்பிட்ட இடங்களில் மறுவாக்குப்பதிவு மேற்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை முன்னதே மேற்கு வங்க தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, பராசத் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தேகங்கா சட்டமன்ற தொகுதியில் குறிப்பிட்ட சில இடங்களிலும், மதுராபூர் (தனி) நாடாளுமன்றத் தொகுதியில் காக்டிவிப் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சில வாக்கு சாவடிகளிலும் ஜூன் 1இல் நடைபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டுள்ளது.
இந்த மறுவாக்குப்பதிவானது காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் நீண்ட வரிசையால் நின்று வாக்களித்து வருகின்றனர். வழக்கம் போல மாலை 6 மணி வரை இந்த மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…