டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமிய (Jamia Millia Islamia) பல்கலைகழக மாணவர்கள் மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது மட்டும் அல்லாமல்,கண்ணீர் புகைக்குண்டு வீசினார்கள்.இதனால் அங்கு வன்முறை ஏற்பட்டது.பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டது.இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் போராட்டமாக வெடித்தது.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் போராட்டம் நடைபெற்ற நிலையில் இன்று டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் அம்பேத்கர் பல்கலைக்கழக மாணவர்கள்,ஜாவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அந்த பகுதி மக்கள் ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.அந்த போராட்டத்தில் சிறுது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதன்விளைவாக போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் முயற்சி மேற்கொண்டனர். மோதலை தொடர்ந்து சீலம்பூர் முதல் ஜஃப்ராபாத் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. சீலாம்பூர் மற்றும் கோகுல்புரி மெட்ரோ ரயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…