தெலுங்கானாவை சேர்ந்த விவசாயி ரெத்ய நாயக் என்பவர் அறுவை சிகிச்சைக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை எலிகள் துண்டாடியுள்ளது.
தெலுங்கானாவின் மகாபூப்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு காய்கறி விவசாயியான ரெத்ய நாயக் தனது வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக, மிகவும் கஷ்டப்பட்டு ரூ.2 லட்சம் பணத்தை சேமித்துள்ளார். இந்த பணத்தை அவர் ஒரு பருத்தி பையில் போட்டு, அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்த பணம் முழுவதையும் எலிகள் மென்று, துண்டாடி உள்ளது.
இதனையடுத்து, அந்த விவசாயி இதுகுறித்து கூறுகையில், காய்கறிகளை விற்ற பின் அந்த பணத்தை ஒரு பருத்தி பையில் சேமித்து அலமாரியில் வைத்து இருந்தேன். மீண்டும் அந்த பணத்தை தேவைக்காக பயன்படுத்த பையை திறந்தபோது 500 ரூபாய் நாணயத்தாள்கள் அனைத்தும் எலிகளால் சேதமாக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பணத்தை மாற்றுவதற்காக உள்ளூர் வங்கிகள் அனைத்திற்கும் சென்றுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் அவரது கோரிக்கையை மறுத்ததாகவும் இந்த பணம் இனிமேல் செல்லுபடியாகாது என்றும் தெரிவித்து அவரை ரிசர்வ் வங்கியை தொடர்பு கொள்ளுமாறு கூறி உள்ளனர்.
இந்நிலையில் தெலுங்கானா பழங்குடியினர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்தியவதி ரத்தோட் அவர்கள் இந்த சம்பவம் தொடர்பாக கேள்விப்பட்டு அந்த விவசாயிக்கு உதவ முன்வந்துள்ளார். அவரிடம் அவருக்கு விருப்பமான மருத்துவமனையில் அறுவை சிகிச்சையையும் மேற்கொள்ளுமாறும், அதற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். இதனையடுத்து அமைச்சருக்கு, ரெத்ய நாயக் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…
சென்னை : இன்றும் நாளையும் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில்…
டெல்லி : பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இரு…
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…