உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் ஊழியரை வீடு தேடி சென்று நலம் விசாரித்துள்ளார் தொழிலதிபர் ரத்தன் டாடா.
83 வயதான இவர் டாடா குழுமம் நிறுவனங்களின் தலைவராக பதவி வகித்த பிறகு தற்போது அறக்கட்டளை பணிகளை முன்னின்று கவனித்து வருகிறார். இவரது நிறுவனத்தில் பணியாற்றிய ஓய்வுபெற்ற முன்னாள் ஊழியர் ஒருவர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலம் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் இவரை பார்ப்பதற்காக மும்பையில் இருந்து புனே சென்ற ரத்தன் டாடா, வீட்டில் இருந்த அவரை நேரில் சென்று நலம்விசாரித்தார்.
ரத்தன் டாடாவின் வருகையை எதிர்பாராத அந்த ஊழியரின் குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் திகைத்து நின்றனர். முன்னாள் ஊழியர் ஒருவரின் வீடு தேடிச் சென்று சந்தித்து நலம் விசாரித்த முன்னணித் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் இந்தச் செயலை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள். இந்தியாவின் பிரபல தொழிலதிபராக திகழ்பவர் ரத்தன் டாடா, ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் உள்பட பலருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலம் உதவிகளைச் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடும் மேட்ச் வரும் 2-ம் தேதி துபாயில்…
சென்னை : நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கில் சீமான் ஆஜராகி விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் தேவை என காவல்துறையிடம் கேட்க…
காத்மாண்டு : நேபாளத்தின் காத்மாண்டு அருகே இன்று அதிகாலை 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இவரது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தொண்டர்கள்…
சென்னை : சீமான் வீட்டில் போலீசாரை தாக்கிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சீமான் வீட்டு காவலாளிகள் அமல்ராஜ், சுபாகர்…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…