ஜார்க்கண்ட் மாநிலம் கிருதி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பிறந்து மூன்று நாட்களே ஆன குழந்தையின் முழங்கால் மற்றும் கைகளில் எலி கடித்துள்ள சம்பவம் அரங்கேறி, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த மே இரண்டாம் தேதி இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த குழந்தை ஆபத்தான நிலையில் இருந்ததால், அருகிலுள்ள தான்பாத் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும், தற்போது குழந்தையின் உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குழந்தையின் தாய் மம்தா தேவி கூறுகையில், கிருதி அரசு மருத்துவ மனையில் குழந்தைகள் நல வார்டில் குழந்தை வைக்கப்பட்டிருந்ததாகவும், தன் குழந்தையை பார்க்க சென்ற போது குழந்தையின் முழங்கால்கள் மற்றும் கைகளில் எலி கடித்ததால் ஆழமான காயங்கள் இருப்பதை கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், குழந்தை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி பிறந்ததாகவும் குழந்தைக்கு மூச்சுத்திணறல் இருந்ததால் குழந்தைகள் நல வார்டில் தனியாக அனுமதிக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். தற்பொழுது இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளதுடன், அந்நேரம் பணியிலிருந்து ஊழியர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நேற்றைய விடுமுறை தினத்தை தொடர்ந்து இன்று காலை அவை தொடங்கியதும், கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது குறித்த சட்ட…
டெல்லி : 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை இன்று மாலை வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. டெல்லியில் உள்ள…
தெஹ்ரான்: ஈரானின் தெற்கு மாகாணமான ஹோர்மோஸ்கானில் உள்ள துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40…
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…