ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் ஊழல் வழக்கின் தீர்ப்பு நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?

Published by
Dinasuvadu desk

மாட்டு தீவன ஊழலின் 4வது வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு வழங்கப்பட இருந்த  தீர்ப்பு சில காரணங்களால் நாளை ஒத்திவைக்கப்பட்டது.காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை.

பீகார் மாநிலத்தில் நடந்த மாட்டு தீவன ஊழல் தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது 6ற்கும் மேற்ப்பட்ட  வழக்குகள் போடப்பட்டன. இதில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.எனினும் மீதி வழக்குகள் விசரனை
இன்னும் நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

இம்மூன்று வழக்குகளின் தீர்ப்புகளில் முறையே 5, 3 மற்றும் 5 ஆண்டுகள் சிறை தண்டனை லாலுவுக்கு வழங்கப்பட்டது. இதன்படி ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா சிறையில் லாலு அடைக்கப்பட்டுள்ளார்.

1995-96ல் தும்ஹா கரூவூலத்தில் இருந்து ரூ.3.13 கோடி அளவிற்கு மாட்டு தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்ததாக தொடரப்பட்ட, 4வது மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் மார்ச் 5ஆம் தேதி விசாரணை முடிவடைந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கின் தீர்ப்பு சில காரணங்களால் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த வழக்கில் லுாலு, ஜெகந்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Rashtriya Janata Dal leader Lalu Prasad’s corruption case adjourned tomorrow What is the reason?

 

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

14 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

22 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago