இந்தியாவில் விளையும் அரியவகை மாம்பழம்..! ஒரு கிலோ ரூ.2.70 லட்சம்..!

Published by
Sharmi

இந்தியாவில் அரியவகை மாம்பழமான மியாசாகி வகையை வளர்த்து அதிக லாபத்தை பெற்று வரும் தம்பதி ஒரு மாம்பழத்தின் விலை ரூ.21,000. 

மத்திய பிரதேசம் ஜபால்பூர் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் சங்கல்ப் பரிஹாஸ் மற்றும் ராணி. இவர்கள் இருவரும் ஒருமுறை சென்னை வந்துள்ளனர். அப்போது ஒருவர் அரியவகை மா மரக்கன்றுகளை இவர்களுக்கு கொடுத்துள்ளார். இவர்களும் சாதாரண மா மரக்கன்றுகளை போன்று இவர்களது தோட்டத்தில் வைத்து வளர்த்துள்ளனர். இது பெரிய மரமாகி பழங்கள் வைக்கும் போதுதான் இதன் அதியசயத்தை அறிந்துள்ளனர். இந்த மாம்பழம் சாதாரண மாம்பழங்களை போன்று மஞ்சள் அல்லது பச்சை நிறத்தில் இல்லாமல் சிவப்பு நிறத்தில் இருந்துள்ளது.

பிறகு இந்த மாம்பழத்தை குறித்த செய்திகளை தேட ஆரம்பித்துள்ளனர். இதன் பின்னரே இவர்களுக்கு இந்த மாம்பழத்தின் அதிசயம் தெரிய வந்துள்ளது. ரூபி சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த மாம்பழம் ஜப்பான் நாட்டில் மியாசாகி என்ற இடத்தில் இது முதன் முதலாக பயிரிடப்பட்டுள்ளது. மேலும், இது மருத்துவகுணங்கள் நிறைந்திருப்பதால் இதற்கு சர்வதேச பழங்கள் சந்தையில் அதிக விலை போகும் மாம்பழம் என்று தெரிந்துகொண்டுள்ளனர். கடந்த வருடம் இந்த மாம்பழத்தை ஒரு கிலோ ரூ.2.70 லட்சத்திற்கு விற்றுள்ளனர். கடந்த வருடம் இந்த அரிய மாம்பழத்தின் செய்திகளை அறிந்து சில திருடர்கள் மாம்பழத்தை திருடி சென்றுள்ளனர்.

அதனால் இந்த வருடம் 4 காவல்காரர்கள், 6 நாய்கள் என்ற பாதுகாப்புடன் இந்த மாம்பழங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு மாம்பழத்தின் விலை ரூ.21,000 என்றும் தெரிவித்துள்ளனர். இதில், பீட்டா கரோட்டின், போலிக் அமிலம், ஆக்சிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இது பார்வை குறைபாடுகளை சரிசெய்வதில் வல்லமை பெற்றது. இதன் அபூர்வத்தை தெரிந்து கொண்ட இவர்கள் இதனை மேலும் அதிகரிக்க இருப்பதாக தோட்டத்தின் உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

WI-W vs NZ-W : இறுதி சுற்றுக்கு முன்னேறியது நியூஸிலாந்து மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் முன்னதாக நடைபெற்றப் முதல் அரை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய…

28 mins ago

“ஒரு ஊர்ல ஒரு பிச்சைக்காரன்”..நடிப்பில் மிரட்டிய கவின்! வெளியானது Bloody Beggar ட்ரைலர்!

சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…

2 hours ago

“முதல்வர் ஸ்டாலின் இனவாதக் கருத்தை முன்வைப்பது மலிவானது” – ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்!!

சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…

3 hours ago

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: “ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை” -ஆளுநர் மாளிகை விளக்கம்!

சென்னை :   இன்று சென்னையில் நடைபெற்ற  இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…

4 hours ago

“திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி”..எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…

5 hours ago

ஆளுநரா? ஆரியநரா? ஆளுநர் ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…

6 hours ago