ரேபிட் டெஸ்ட் கருவிகள் விவகாரம்.! சீன தூதரகம் வெளியிட்ட அதிரடி அறிக்கை.!

Published by
மணிகண்டன்
ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை சீனாவிடம் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது தொடர்பாக சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றை விரைவாக கண்டறிய பயன்படும் ரேபிட் ஆன்டிபாடி டெஸ்ட் கருவிகளை மத்திய அரசானது சீனாவிடம் இருந்து வாங்கியது. ஆனால், அந்த கருவிகளில் இருந்து சரியான முடிவு தெரியவராததால் சீன நிறுவனத்திடம் இருந்து வாங்கிய பொருட்களை சீனாவிடம் திருப்பி அனுப்ப மத்திய அரசுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியது.
இந்த விவகாரம் குறித்து, டெல்லியில் உள்ள சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ கொரோனா வைரஸ் தற்போது மனித குலத்தின் பொது எதிரி. அதனை வெல்ல கூட்டாக செயல்படுவது முக்கியம். கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து இந்தியா-சீனா இடையே நல்ல தகவல் தொடர்பு நிலவி வருகிறது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தனது அனுபவங்களை இந்தியாவிடம் சீனா பகிர்ந்து கொண்டு வருகிறது. இந்தியாவிற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை நன்கொடையாகவும் வழங்கியுள்ளது. சீனாவில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மருத்துவ உபகரணங்களானது தரத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அப்படி இருக்கையில், சிலர், சீன பொருட்கள் தரமற்றவை என்று குற்றச்சாட்டு கூறுவது நியாயமானது அல்ல. காரணங்களை முன்கூட்டியே உருவாக்கிக்கொண்டு குறை சொல்கிறார்கள்.
இதே கருவிகள் ஐரோப்பா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா போன்ற பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அங்கெல்லாம் இக்கருவிகள் நன்றாக செயல்படுகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய மதிப்பீடு கவலை அளிக்கும் வகையில் உள்ளது. சீனாவின் உண்மைத்தன்மையை இந்தியா மதித்து நடக்கும் என்று நம்புகிறோம். சீன நிறுவனங்களுடன் கலந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்பெறும் என நம்புகிறோம்.’ என சீன தூதரகம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Published by
மணிகண்டன்

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago