காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு…!

Default Image

மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்.எல்.ஏ மீது பாலியல் பலாத்கார வழக்குப்பதிவு. 

மத்தியப் பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உமாங் சிங்கார் மீது 38 வயது பெண் ஒருவர் காவல்நிலையத்தில், பாலியல் பலாத்கார புகார் அளித்தார்.  இதனையடுத்து, தார் நகரில் உள்ள நவ்கான் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதுகுறித்து தார் போலீஸ் எஸ்பி ஆதித்யா பிரதாப் சிங் கூறுகையில், ‘காந்த்வானி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமாங் சிங்கார், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனால் பெண், எம்எல்ஏ உமாங் சிங்கார் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்தியபிரதேச காங்கிரஸ் கமிட்டியின் ஊடகத் துறைத் தலைவர் கே.கே.மிஸ்ரா கூறுகையில், ‘எம்எல்ஏ மீதான வழக்கு குறித்து என்னிடம் எந்த தகவலும் இல்லை; ஆனால், அரசியல் உள்நோக்கத்துடன் அவர் மீது வழக்கு பதிந்திருக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

அவரது புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 294 (ஆபாசமான சட்டம்), 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 376 (2) (கற்பழிப்பு), 377 (இயற்கைக்கு மாறான குற்றங்கள்), 498 (ஏ) (துன்புறுத்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்