ராஜஸ்தான் 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 6 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு!

Default Image

40 வயது பெண்ணை ராஜஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்த 6 இளைஞர்கள், அவற்றை இன்டர்நெட்டில் பரப்பியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பரன் மாவட்டத்தில் (Baran) நெடுஞ்சாலையோர உணவகத்தில் வேலை செய்யும் பெண் ஒருவர், தனியே சென்றபோது எதிர்ப்பட்ட, ஏற்கனவே அறிமுகமான இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார்.

யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச் சென்ற அந்த நபர், நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, வீடியோ படமும் எடுத்துள்ளார்.

இவற்றை வெளியே கூறினால் அவரது குடும்பத்தினரை கொன்றுவிடுவதாக மிரட்டியதால், அந்தப் பெண் அமைதியாகியுள்ளார். இந்நிலையில், அந்த வீடியோ இன்டர்நெட்டில் பரவியதை அறிந்த அந்தப் பெண், பரன் மாவட்ட மகளிர் போலீசில் அளித்த புகாரின்பேரில், 6 இளைஞர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்