அரியானா மாநிலச் சட்டமன்றத்தில் சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
12வயதுக்குட்பட்ட சிறுமிகளைப் பாலியல் பலாத்காரம் செய்வதைக் கொடிய குற்றமாகக் கருதி அத்தகைய குற்றத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கச் செய்யும் சட்டம் ஏற்கெனவே மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் இயற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அரியானா சட்டமன்றத்தில் நேற்று இதற்கான மசோதாவை அமைச்சர் ராம் விலாஸ் சர்மா கொண்டுவந்தார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் கிரண் சவுத்ரி பாதிக்கப்படுபவர்களின் வயதைக் கருத்தில் கொள்ளாமல் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். எனினும் அவரது வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. முந்தைய வடிவிலேயே சட்டமசோதா அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…