தனியார் வங்கியான “யெஸ் வங்கி” அதிகமான கடன்களை கொடுத்ததால் வாராக்கடன் அதிகரித்துள்ளது. இதனால் நெருக் கடியில் சிக்கிய யெஸ் வங்கியின் ஒட்டு மொத்த கட்டுப்பாட்டையும் ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளது.
யெஸ் வங்கிக்கு சில காலம் கடன்கள் வழங்குவதை நிறுத்தி வைக்கும் படியும் ,மேலும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்கில் இருந்து மாதம் ரூ.50 ஆயிரம் மட்டுமே எடுக்க வேண்டும் என்றும் மறுஉத்தரவு வரும் வரை இதை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்நிலையில் யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல நிறுவனங்களுக்கு கடன் வழங்கியது தொடர்பாக ராணா கபூரிடம் விசாரணை நடத்தினர்.
பின்னர் ராணா கபூர் மீது பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நேற்று முன்தினம் கைது செய்தனர்.இதையெடுத்து நேற்று மும்பையில் உள்ள விடுமுறை நீதிமன்றத்தில் ராணா கபூரை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
அப்போது நீதிபதிகள் நாளை மறுநாள் வரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தனர்.இந்நிலையில் நேற்று மும்பை விமான நிலையத்தில் ராணா கபூரின் மகள் ரோஷிணி வெளிநாட்டுக்குத் தப்ப முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டார்.
மும்பை : டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் நினைவாக வான்கடே மைதானத்தில்…
சென்னை : வெற்றிமாறனின் விடுதலை பாகம் 2 படத்தில் கடைசியாக நடித்த நடிகர் சூரி, அடுத்து இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜின்…
சென்னை : சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிடி நெக்ஸ்ட் லெவல், சூரியின் மாமன், யோகிபாபுவின் ஜோரா கைய தட்டுங்க ஆகிய…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் மோதல் காரணமாக ஒரு வார காலம் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், மே 17 முதல் மீண்டும்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…