ராமர் கோயில் கட்டுமானத்திற்கான “பூமி பூஜை” விழாவில் பங்கேற்பதற்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு அனுப்பப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நீண்ட காலமாக சட்டப்போராட்டம் நடைபெற்றது.இதன் பின்னர் இறுதியாக உச்சநீதிமன்றம் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அனுமதி அளித்தது. எனவே அங்கு கோயிலை கட்டுவதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளது.
பிரதமர் மோடி ஆகஸ்ட் -5 ஆம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிகளைத் தொடங்கி வைப்பதற்கு “பூமி பூஜை” விழாவிற்கு அயோத்தியாவுக்கு செல்கிறார். லட்சக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளார்கள்.இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பங்கேற்கிறார்.இந்த விழாவில் பங்கேற்க முக்கிய நபர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் தான் சிவசேனா தலைவரும், மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரேக்கு அழைப்பு அனுப்பப்படாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று தீவிரமாக இருந்த கட்சிகளில் ஓன்று சிவசேனா என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…