ராமர் கோயில் கட்டுமானத்திற்கான “பூமி பூஜை” விழாவை காணொலி மூலம் நடத்த முடியும் என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்திற்கான விழாவை காணொலி மூலம் நடத்த முடியும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனாவின் தலைவரான உத்தவ் தாக்கரே இந்த விழாவிற்கு உத்தரப்பிரதேச அயோத்தியாவுக்குச் செல்லலாம் என்று கூறினார். ஆனால் லட்சக்கணக்கான “ராமர் பக்தர்கள்” அங்கு செல்வதைத் தடுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கிடையில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் உறுப்பினர்கள் கூறுகையில், பிரதமர் மோடி ஆகஸ்ட் -5 ஆம் தேதி ராமர் கோயில் கட்டுமான பணிகளைத் தொடங்கி வைப்பதற்கு “பூமி பூஜை” விழாவிற்கு அயோத்தியாவுக்கு வருவார்.
இது மகிழ்ச்சியான நிகழ்வு, மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இந்த விழாவில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்டுள்ளார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை நாங்கள் அனுமதிப்போமா என உத்தவ் தாக்கரே இன்று பேட்டியில் கூறினார். இந்நிலையில் ராம் கோயில் பிரச்சினை போராட்டத்தின் பின்னணி உள்ளது அதனால் காணொலி மூலம் நடத்த முடியும் என்று அவர் பரிந்துரைத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் 28 ஆம் தேதி சேனா தலைமையிலான மகா விகாஸ் அகாடி (எம்விஏ) அரசாங்கத்தின் முதல்வராக அவர் பதவியேற்றார், 100 நாட்கள் பதவியில் இருந்ததை நினைவு கூருவதற்காக தாக்கரே மார்ச் மாதம் அயோத்தி சென்றார் என்பது குறிப்பித்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…