மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு மாநிலங்களவையில் இரங்கல்

Default Image

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ,துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் நரேந்திர மோடி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா ,காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த் நிலையில் இன்று மாநிலங்கவை நடைபெற்றது.அப்போது மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.மாநிலங்களவையில் எம்பிக்கள் அனைவரும் ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா  நாயுடு அவையில் பேசுகையில், சுஷ்மா ஸ்வராஜ் மறைவால் சிறந்த நாடாளுமன்ற வாதியையும், மக்களின் உண்மையான குரலையும் இந்த தேசம் இழந்துள்ளது என்று பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்