கிழக்கு லடாக்கில் இந்தியாவும், சீனாவும் தங்கள் படைகளை நீக்கி வரும் நிலையில், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இந்திய விமானப்படையின் உயர்மட்ட தளபதிகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சு வார்த்தை மூன்று நாள் நடைபெறும்.
இன்று ராஜ்நாத் சிங் விமானப்படை தளபதிகளுக்கு ஆற்றிய உரையில், அவர் கடந்த ஆண்டு பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்திய விதம் மற்றும் கிழக்கு லடாக்கில் நிலவும் சூழ்நிலைக்கு பதிலளிக்கும் வகையில் முன்னோக்கி பல இடங்களில் இந்திய விமானப்படை விரைவாகப் படைகளை நிறுத்தியதற்கு பாதுகாப்பு அமைச்சர் பாராட்டினார்.
மேலும், கடந்த சில மாதங்களாக இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறன்களை பாராட்டினார். நாட்டின் இறையாண்மையைக் காக்க தேசத்தின் தீர்மானம் இராணுவத்தின் திறமையில் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையில் உள்ளது. ஆயுதப்படைகளின் அனைத்து தேவைகளும், நிதி ரீதியாகவோ அல்லது வேறுவிதமாகவோ பூர்த்தி செய்யப்படும் என்று அவர் தளபதிகளுக்கு உறுதியளித்தார்.
எல்.ஐ.சி விரிவாக்கத்திற்கான தற்போதைய முயற்சிகளை அவர் குறிப்பிட்டு ,எந்தவொரு நிகழ்வையும் கையாள தயாராக இருப்பதாகவும் கூறினார். 36 ரஃபேல் போர் விமானங்களில் குறைந்தது ஆறு ரஃபேல் போர் விமானங்கள் ஜூலை இறுதிக்குள் அம்பாலா விமான நிலையத்தில் ஒப்படைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் : ஆந்திரப் பிரதேசம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் மிருக கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதலமைச்சர்…
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…