மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற முப்படைகளின் தளபதிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்திய – சீன எல்லையான லடாக் பகுதியில் சில நாள்களுக்கு முன் நடைபெற்ற இரு நாட்டு ராணுவ வீரர்களின் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். இந்த செய்தி இருநாட்டினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற முப்படைகளின் தளபதிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.
அப்போது முப்படைகளும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் ரோந்து செல்லும் போது வீரர்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவித்தியுள்ளாராம்.
இதுபோக கடலோர பாதுகாப்பு மற்றும் வான்வழி பாதுகாப்பு படைகளையும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 24ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெற உள்ள இரண்டாம் உலகப்போரின் வெற்றி கொண்டாட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் அவர் நடத்திய முப்படை தளபதியுடன் நடத்திய இந்த ஆலோசனை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் தொடர்பாக கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வீட்டுவசதித்துறை மானிய கோரிக்கைகள் நடைபெற்று…
மும்பை : கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தார். அமெரிக்கவில் இறக்குமதி ஆகும்…
திருச்சி : இன்று காலை முதலே தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு தொடர்புடையவர்கள் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி…
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…