அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டும்.! முப்படைகளுக்கும் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தல்.!

Default Image

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற முப்படைகளின் தளபதிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்திய – சீன எல்லையான லடாக் பகுதியில் சில நாள்களுக்கு முன் நடைபெற்ற இரு நாட்டு ராணுவ வீரர்களின் மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் பலியாகினர். இந்த செய்தி இருநாட்டினரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியது.

இந்நிலையில், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற முப்படைகளின் தளபதிகள் உடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது முப்படைகளும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளதா தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்திய சீன எல்லைப்பகுதியான லடாக் பகுதியில் ரோந்து செல்லும் போது வீரர்கள் பாதுகாப்பாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும் எனவும் அறிவித்தியுள்ளாராம்.

இதுபோக கடலோர பாதுகாப்பு மற்றும் வான்வழி பாதுகாப்பு படைகளையும் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 24ஆம் தேதி ரஷ்யாவில் நடைபெற உள்ள இரண்டாம் உலகப்போரின் வெற்றி கொண்டாட்டத்தில் இந்தியா சார்பாக கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னர் அவர் நடத்திய முப்படை தளபதியுடன் நடத்திய இந்த ஆலோசனை மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்