லடாக் சென்ற பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் .
லடாக் எல்லை பகுதியில் இந்திய- சீன ராணுவத்திற்கு இடையே ஜூன் 15 ஆம் தேதி நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து, எல்லையில் போர்ப் பதற்றம் அதிகரித்தது. இதனால், பதற்றத்தைத் குறைக்க 4 முறை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக குறைந்து வந்தனர்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று லடாக் சென்றுள்ளார். அவருடன் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் ஆகியோர் சென்றனர். இதைத்தொடர்ந்து, லடாக்கில் உள்ள ஸ்டக்னா பகுதியில் ராணுவ வீரர்கள் நடத்திய சாகச நிகழ்ச்சிகள், பாதுகாப்பு ஒத்திகைகளை ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.
இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீனா தங்களது படைகளை விலகி உள்ளது ஆனால், ஃபிங்கர் பகுதி மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் படைகளை விலக்கி கொள்வதில் சீனா சற்று தயக்கம் கட்டி வருகிறது.
கடந்த ஜூலை 3-ம் தேதி ராஜ்நாத் சிங் லடாக் வருவதாக இருந்தது. ஆனால், பிரதமர் மோடி சென்றதால் ராஜ்நாத் சிங் பயணம் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…