இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா வருகின்ற மே 14 ஆம் தேதியுடன் ஓய்வு பெரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் புதிய தலைவராக ராஜீவ் குமாரை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை 24 பேர் தலைமை தேர்தல் ஆணையர்களாக நியமிக்கப்பட்ட நிலையில்,சுசில் சந்திரா 24 வது தலைமை தேர்தல் ஆணையராக இருந்து வந்தார்.தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராஜீவ் குமார்,கடந்த 1984 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.மேலும்,இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியத்தின் இயக்குநர்,நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர், வங்கி வாரிய பணியகம் (BBB) உறுப்பினர், நிதித் துறை ஒழுங்குமுறை நியமனங்கள் தேடல் குழு (FSRASC), சிவில் சர்வீசஸ் வாரியம் போன்ற பல வாரியங்கள் மற்றும் குழுக்களில் பணிபுரிந்துள்ளார்.இதனையடுத்து,பிப்ரவரி 2020 இல் இந்திய நிர்வாக சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.அதன்பின்னர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில்,மூத்த தேர்தல் ஆணையராக அவர் இருந்து வரும் நிலையில்,தேர்தல் ஆணையத்தின் விதிகளின் படி,தற்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.மேலும்,வருகின்ற மே 15 ஆம் தேதி அவர் பதவி ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…