ராஜீவ் காந்தி அவர்களின் 77 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், டெல்லியிலுள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று ராகுல் காந்தி அவர்கள் மரியாதை செலுத்தியுள்ளார்.
1944-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி பிறந்தவர் தான் ராஜீவ் காந்தி. இவரது 77 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 1984 முதல் 1989 வரை இந்தியாவின் பிரதமராக பணியாற்றிய இவர், 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தற்கொலைப் படையினரால் படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளின் போது ஒவ்வொரு வருடமும் நாடு முழுவதும் உள்ள இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் சேர்ந்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அதன்படி இன்றும் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி அவர்களின் நினைவிடத்துக்கு சென்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார். மேலும் இவருடன் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோரும் சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…