ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, நடிகர் ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு நெகடிவ் என வந்துள்ளது. இருப்பினும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார்.
இதையடுத்து, இன்று ரத்த அழுத்தத்தில் மாறுதல் காரணமாக ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுருந்தது.
இதைத்தொடர்ந்து, ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து அரசியல் தலைவர் உட்பட பலரும் கேட்டறிந்த நிலையில், ரஜினி விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனையில் இருந்து வந்த செய்தியைக் கேட்ட பிறகு, அவர் விரைவில் உடல்நலம் தேறி ஆரோக்கியம் பெற வேண்டும் என்று பகிர்ந்துள்ளார்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…
சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…
சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…
கொல்கத்தா : கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி வெற்றிபெற்று கோப்பையை வென்றது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில்…
நாகப்பட்டினம் : நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள்…