ராஜஸ்தான் : 3 வயது மகனை அடித்து கொன்ற மனைவி கைது …!

Published by
Rebekal

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பரான் என்னும் மாவட்டத்தில் உள்ள சிப்பாபரோட் நகரில் வசித்து வரக்கூடிய 26 வயது பெண் ஒருவர் தனது 3 வயது மகனை அடித்து கொன்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். காயத்ரி ஜாதவ் என அடையாளம் காணப்பட்டுள்ள பெண் மீது அவரது கணவர் அணில் ஜாதவ் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதன்படி திங்கள் கிழமை வேலை முடிந்து வீடு திரும்பிய போது தனது மகன் இறந்து கிடந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டுள்ள பெண்மணி மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அவர் தனது மகனை வீட்டிற்குள் பூட்டி வைத்து அடித்ததாகவும் அப்பெண்ணின் கணவர் போலீசில் கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் மயங்கிய நிலையில் இருந்த மகனைக் கண்டதும் பதறிப்போன தந்தை, சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அங்கு சென்றதும் மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக கூறியதாகவும் கூறியுள்ளார். மேலும் அருகில் இருந்தவர்கள் அந்த பெண் தனது மகனை அடிப்பதை தடுக்க முயன்றாலும் அவள் கதவைத் திறக்காமல் கொடூரமாக தாக்கியதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து காயத்ரி ஜாதவ எனும் பெண் மீது இந்திய தண்டனை சட்டம் 302 கீழ் எப்.ஐ.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, குடும்பத்தினரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பெண்மணி இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

11 mins ago

துணை முதல்வர் கேள்வி., “அரசியல் வேண்டாம்” ஒதுங்கிய ரஜினிகாந்த்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…

20 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

3 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

3 hours ago