ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் 18 எம்.எல்.ஏ க்களுடன் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியை சார்ந்த 6 எம்.எல்.ஏ.-க்களை காங்கிரஸ் கட்சியுடன் அசோக் கெலொட் இணைத்திருந்தார். இந்நிலையில்,பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தது.
அந்த மனுவில், எம்.எல்.ஏக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ இணைப்புக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால், நீதிபதி பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கையை நிராகரித்தார். சச்சின் பைலட் மற்றும் 18 பேர் டெல்லியில் முகாமிட்டுள்ளதால் காங்கிரசுக்கு 102 இடங்கள் மட்டுமே உள்ளது. இந்த 6 எம்.எல்.ஏக்கள் இணைபுக்கு தடைவிதிக்கப்பட்டு இருந்தால் காங்கிரஸ் பலம் 96 ஆக குறைந்து இருக்கும்.
வருகின்ற 14-ம் தேதி சட்டசபையில் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…
நாய்பிடாவ் : மியான்மரில் நேற்று 7.7 ரிக்டர் அளவு மற்றும் 6.4 ரிக்டர் என்ற அளவு இரண்டு நிலநடுக்கங்கள் அடுத்தடுத்து…