ராஜஸ்தான் அமைச்சர் பன்வர் லால் மேக்வால் மறைவு  .! இரங்கல் தெரிவித்த ராஜஸ்தான் முதல்வர்.!

Published by
Ragi

ராஜஸ்தான் மாநில சமூக நீதித்துறை அமைச்சர் பன்வர் லால் மேக்வால் காலமானார் .

ராஜஸ்தான் மாநிலத்தின் சமூக நீதித்துறை அமைச்சராக இருந்தவர் பன்வர் லால் மேக்வால் . சுரு மாவட்டத்தின் சுஜன்கர் சட்டமன்ற தொகுதியை பிரிதிநிதித்துவப்படுத்திய முக்கிய காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான மேக்வாலுக்கு இந்தாண்டு மே மாதம் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது .

அதனையடுத்து குர்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் பன்வர் லால் . கடந்த ஐந்து முறை எம்எல்ஏ-ஆக இருந்த மேக்வால் திங்களன்று குர்கானில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . 72 வயதான மேக்வாலின் மரணத்திற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லோட் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது இரங்கல் செய்தியில்,

எங்கள் மூத்த அமைச்சரான பன்வர் லால் மேக்வால் உடல்நலக் குறைவால் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்து தற்போது காலமானதில் மிகுந்த வருத்தம் அடைகிறேன். 1980 முதல் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். மேலும் கடவுள் அவர்களுக்கு துயரத்தை தாங்குவதற்கான மன தைரியத்தை அளிக்கட்டும் என்று கூறினார் . சமீபத்தில் பன்வர் லால் மேக்வாலின் மகள் பனராசி தேவி இருதய கோளாறு காரணமாக காலமானது குறிப்பிடத்தக்கது.

 

Published by
Ragi

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

5 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

5 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

5 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

5 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

5 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

5 hours ago