புகைப்படங்கள் எடுப்பதற்கு தடை – ராஜஸ்தான் அரசு அதிரடி.!

Default Image

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், பலரும் உணவின்றி தவித்து வருகின்றனர். அதே சமபயத்தில் ஆதரவற்றவர்கள் பலர் உணவின்றி தவிக்கின்றார்கள். அவர்களுக்கு அரசும், பல தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் உதவி செய்து வருகிறார்கள். இதில் பலர் சத்தமில்லாமல் உதவி செய்தாலும், உதவி செய்வதை மற்றவர்கள் பார்த்தால் பார்ப்பவர்களும் உதவி செய்யும் எண்ணம் தோன்றலாம் என்ற நோக்கத்தோடு சிலர் புகைப்படம் எடுப்பார்கள்.

ஆனால் தற்போது பலர் சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு விளம்பரம் செய்து கொள்வதற்காகவே உதவி செய்வதை புகைப்படம் எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் போது புகைப்படங்கள் எடுக்க ராஜஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெஹ்லோட், ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்வது சேவையாக இருக்க வேண்டுமே தவிர விளம்பரமாக இருக்க கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் ஆதரவற்றவர்களுக்கு, தொண்டு நிறுவனங்கள் உதவி செய்வதை மாவட்ட ஆட்சியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அதே சமயத்தில் சரியான சமூக இடைவெளியுடன் உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்