ராஜஸ்தான்: மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பிய காவலர் இடைநீக்கம்..!

Published by
Sharmi

ராஜஸ்தானில் உள்ள அஜ்மீரில் மைனர் பெண்ணுக்கு ஆபாச உரை மற்றும் வீடியோக்களை அனுப்பிய காவலர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அன்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது, அஜ்மீரில் ஒரு மைனர் பெண்ணுக்கு அநாகரீகமான குறுஞ்செய்தி மற்றும் வீடியோக்களை அனுப்பிய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் சிங், மீது ஐடி மற்றும் போக்சோ சட்டங்களின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விக்ரம் சிங்கிற்கு எதிராக பிசங்கன் பஞ்சாயத்து சமிதி உறுப்பினர் பிரதீப் குமவத் அளித்த புகாரின் படி, இந்த போலீஸ்காரர் கடந்த சில மாதங்களாகவே அந்த சிறுமியை துன்புறுத்தி வந்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சிறுமியின் சார்பில் குமவாத் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து தெரிவித்த அஜ்மீர் போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஷ் சந்திர சர்மா, நாங்கள் குற்றம் சாட்டப்பட்ட கான்ஸ்டபிளை சஸ்பெண்ட் செய்துள்ளோம். அவர் மீது ஐடி சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணை முடிந்த பிறகு அவர் கைது செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Recent Posts

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

பிக் பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பை சொல்லும் போட்டியாளர்? டேஞ்சர் ஜோனில் சிக்கிய இருவர்!

சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கி விட்டது என்றாலே அந்த நிகழ்ச்சி பற்றிய விஷயங்கள் தினம் தினம் தலைப்பு…

49 mins ago

“இந்தி மாதம் கொண்டாடப்படுவது தவிர்க்கப்படவேண்டும்” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…

1 hour ago

‘நிரந்தர பொதுச்செயலாளர்’ விவகாரம்., தவெக தொண்டர்களுக்கு கண்டிஷன் போட்டபுஸ்ஸி ஆனந்த்.!

சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…

2 hours ago

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி..! வெளியான அறிவிப்பு!

சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…

2 hours ago

16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அலர்ட்!

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…

2 hours ago

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

3 hours ago