Categories: இந்தியா

பிரதமர் மோடியின் ‘சாலை பயணம்’ தோல்வி.! ராஜஸ்தான் முதல்வர் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

வரும் நவம்பர் 25 (சனிக்கிழமை) அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இதோடு, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா (நவம்பர் 30) ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது.

தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. அதுவும். ராஜஸ்தானில் ஆளும்கட்சி காங்கிரஸ். எதிர்க்கட்சி பாஜக என்பதால் முக்கிய தேசிய தலைவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. கண்ணீரை பார்க்க காங்கிரசுக்கு நேரமில்லை.. பிரதமர் கடும் குற்றசாட்டு.!

பிரதமர் மோடி ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தியும், மக்களை நேரடியாக சென்று பார்த்தும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று பரன் நகரில் பிரச்சாரத்தில் பேசுகையில் கூட  ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் கூறுகையில், பாஜக இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றியுள்ளது. ராஜஸ்தான் மாநில முன்னேற்றம் இல்லாமல் இது சாத்தியமாகாது. காங்கிரஸ் அரசு எப்போதும் வாரிசு அரசியல்,  ஊழல், தீமைக்கு துணைபோதல் என மூன்றையும் தான் முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளனர். அடுத்து ரெட் டைரி வெளியே வந்தால் காங்கிரசின் பல ஊழல் முறைகேடுகள் வெளியே வரும் யாவும் விமர்சித்தார்.

ராஜஸ்தான் தேர்தல்: 500 ரூபாய்க்கு சிலிண்டர், 2 லட்சம் வட்டியில்லா கடன்! வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

ராஜஸ்தானில் கலவரக்காரர்கள் ஆளும் கட்சி ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண்கள் புகார் கூறினால் பொய் புகார் என கூறுகிறார்கள் என கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி.

தேர்தல் நிலவரம் குறித்து இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், ‘ பிரதமர் மோடியின் சாலை பயணம் (Road Show) தோல்வியடைந்து விட்டது.

அந்த பயணம் வெறும் 9 கிமீ தான் நடைபெற்றது. அதற்குள் பாஜகவினர் மிகவும் பதற்றமடைந்து வெளியில் இருந்து ஆட்களை அழைத்தும் நிலை வந்துவிட்டது. அவர்கள் (பாஜகவினர்) உள்ளூர் பிரச்சினைகளை பற்றி பிரச்சாரத்தில் பேசுவதில்லை என்றும் முதல்வர் அசோக் கெலாட் கருத்து கூறினார்.

Recent Posts

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

10 hours ago

சபாநாயகரை சந்தித்தது ஏன்? ‘இதற்காக தான் போனேன்’ – செங்கோட்டையன் பதில்.!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…

11 hours ago

ஐபிஎல் 2025 சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதுதான்? தோனிக்கு இடமிருக்கா?

டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…

12 hours ago

“வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு” – அண்ணாமலை கடும் விமர்சனம்.!

சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…

14 hours ago

“ஒருவித அழுத்தமான சூழல்., ஆனாலும்., ” சுனிதா வில்லியம்ஸ் மீட்பு குறித்து நாசா கருத்து!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர்  ஜூன் மாதம் முதல் சர்வதேச…

14 hours ago

“மொழிகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் உதவியாக உள்ளது” – பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி.!

சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…

15 hours ago