Categories: இந்தியா

பிரதமர் மோடியின் ‘சாலை பயணம்’ தோல்வி.! ராஜஸ்தான் முதல்வர் கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

வரும் நவம்பர் 25 (சனிக்கிழமை) அன்று ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன் முடிவுகள் வரும் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளது. இதோடு, சத்தீஸ்கர், மிசோரம், மத்திய பிரதேசம், தெலுங்கானா (நவம்பர் 30) ஆகிய மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாக உள்ளது.

தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறக்க ஆரம்பித்துள்ளன. அதுவும். ராஜஸ்தானில் ஆளும்கட்சி காங்கிரஸ். எதிர்க்கட்சி பாஜக என்பதால் முக்கிய தேசிய தலைவர்கள் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் தான் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை.. கண்ணீரை பார்க்க காங்கிரசுக்கு நேரமில்லை.. பிரதமர் கடும் குற்றசாட்டு.!

பிரதமர் மோடி ராஜஸ்தானில் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டம் நடத்தியும், மக்களை நேரடியாக சென்று பார்த்தும் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று பரன் நகரில் பிரச்சாரத்தில் பேசுகையில் கூட  ஆளும் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசினார்.

அவர் கூறுகையில், பாஜக இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றியுள்ளது. ராஜஸ்தான் மாநில முன்னேற்றம் இல்லாமல் இது சாத்தியமாகாது. காங்கிரஸ் அரசு எப்போதும் வாரிசு அரசியல்,  ஊழல், தீமைக்கு துணைபோதல் என மூன்றையும் தான் முக்கிய குறிக்கோளாக வைத்துள்ளனர். அடுத்து ரெட் டைரி வெளியே வந்தால் காங்கிரசின் பல ஊழல் முறைகேடுகள் வெளியே வரும் யாவும் விமர்சித்தார்.

ராஜஸ்தான் தேர்தல்: 500 ரூபாய்க்கு சிலிண்டர், 2 லட்சம் வட்டியில்லா கடன்! வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்!

ராஜஸ்தானில் கலவரக்காரர்கள் ஆளும் கட்சி ஆதரவுடன் செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண்கள் புகார் கூறினால் பொய் புகார் என கூறுகிறார்கள் என கடுமையாக விமர்சித்து பிரச்சாரம் செய்தார் பிரதமர் மோடி.

தேர்தல் நிலவரம் குறித்து இன்று ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், ‘ பிரதமர் மோடியின் சாலை பயணம் (Road Show) தோல்வியடைந்து விட்டது.

அந்த பயணம் வெறும் 9 கிமீ தான் நடைபெற்றது. அதற்குள் பாஜகவினர் மிகவும் பதற்றமடைந்து வெளியில் இருந்து ஆட்களை அழைத்தும் நிலை வந்துவிட்டது. அவர்கள் (பாஜகவினர்) உள்ளூர் பிரச்சினைகளை பற்றி பிரச்சாரத்தில் பேசுவதில்லை என்றும் முதல்வர் அசோக் கெலாட் கருத்து கூறினார்.

Recent Posts

இதான்யா தவெக மாநாடு.. தேதியை குறித்த தொண்டர்கள்!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…

7 hours ago

“சுங்கச்சாவடி கட்டணம் வழிப்பறி” தமிழ்நாடு முழுக்க ம.ம.க முற்றுகை போராட்டம்.!

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…

8 hours ago

ஹாக்கி ஆசிய கோப்பை : இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இந்திய அணி!

ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…

8 hours ago

ஓடிடியில் திகில் காட்ட வருகிறது ‘டிமாண்டி காலனி 2’! ரிலீஸ் தேதி இதோ!

சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…

8 hours ago

செல்வ வளத்தை வாரி வழங்கும் மீன் குளத்தி அம்மன் கோவில் எங்க இருக்கு தெரியுமா ?

சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு  முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…

8 hours ago

ஷூட்டிங் போன இடங்களில் பாலியல் தொல்லை.. ஜானி மாஸ்டர் மீது வழக்கு!

சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…

8 hours ago