டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவிப்பு.
டோக்கியோ பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெஹாராவுக்கு ரூ.3 கோடி பரிசு வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அறிவித்துள்ளார். ஆண்கள் ஈட்டி எறிதல் எஃப் 46 போட்டியில் வெள்ளி வென்ற தேவேந்திர ஜஜாரியாவுக்கு ரூ.2 கோடியும், வெண்கலம் வென்ற சுந்தர் சிங் குர்ஜாருக்கு ரூ.1 கோடியும் வழங்கப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று புதிய சாதனைப் படைத்தார். பாராலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனை ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல்முறை. இவருக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இதுவரை இந்தியா 7 பதக்கங்களை வென்று பாராலிம்பிக் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது. இதனால், பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பலரும் பாராட்டியும், பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு தொகையும் அறிவித்து வருகின்றனர். அந்தவகையில் ராஜஸ்தான் முதல்வர் பரிசு அறிவித்துள்ளார்.
அவனி லெஹாரா, தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் ஆகிய மூன்று வீரர்களும் ஏற்கனவே மாநில அரசின் வனத்துறையில் ஏசிஎஃப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாநில வீரர்கள் பதக்கங்களை வெல்வதன் மூலம் நாட்டிற்கும் மாநிலத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…