ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பது தொடர்பாக வெளியான ஆடியோ ! காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் மீது புகார்

Default Image

ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பது தொடர்பாக வெளியான ஆடியோ விவகாரத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், சச்சின் பைலட் ,முதல்வர் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி துாக்கி தன்னுடைய ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் டெல்லியில் முகாமிட்டு இருந்தார்.

 பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காத நிலையில் துணை முதல்வர் பதவியிலிருந்தும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார். மேலும் அமைச்சர் பதவியிலிருந்து, விஸ்வேந்திர சிங், ரமேஷ் மீனா ஆகியோரும்  நீக்கப்பட்டனர்.

இதனால் சச்சின் பைலட் மற்றும் 18 எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் சிபி ஜோஷி கடந்த செவ்வாய்க்கிழமை தகுதிநீக்க நோட்டீஸ் அனுப்பினார்.  சபாநாயகர் சி.பி. ஜோஷியின் தகுதிநீக்க நோட்டீஸுக்கு எதிராக சச்சின் பைலட் மற்றும் அவரது 18 ஆதரவாளர்கள் எம்.எல்.ஏ. க்கள் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தது.அப்பொழுது சச்சின் பைலட் மற்றும்  அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள்  மீது நடவடிக்கை எடுக்கத்தடை விதிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது.மேலும் வருகின்ற  செவ்வாய் கிழமை வரை நடவடிக்கை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த விவகாரத்தில் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருவதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றது.இதற்கு மத்தியில் தான்  சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்று வைரலானது.அந்த ஆடியோவில் ,மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ., பன்வாரிலால் சர்மா இருவரும், அசோக்  அரசை கவிழ்ப்பது தொடர்பாக நடத்திய பேச்சுவார்த்தை  இடம் பெற்றிருந்தது.இந்த விவகாரம் ராஜஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை மீண்டும் ஏற்படுத்தியது.இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், அரசை கவிழ்க்கும் சதி செயலில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை கைது செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில் பாஜக ராஜஸ்தான் செய்தித் தொடர்பாளர் பரத்வாஜ்  காவல் நிலையத்தில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா மற்றும் காங்கிரஸ் தலைவர் மகேஷ் ஜோஷி மீது அளித்துள்ளார்.பாஜகவின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார் பரத்வாஜ்  .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்