[Representative Image]
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள நிரிசிங்புரா கிராமத்தில் 14 வயது சிறுமி நேற்று காலை தங்கள் வீட்டு கால்நடைகளை அருகில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்றுள்ளார். பின்னர் மதிய வேளையில் கால்நடைகள் வீட்டுக்கு வந்துவிட்டன.ஆனால் சிறுமி வீடு திரும்பவில்லை.
இதனால் சிறுமி வீட்டை சேர்ந்தவர்கள் அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பித்துவிட்டனர். இறுதியில் அருகில் உள்ள நிலக்கரி உலை பகுதி அருகே எதோ எரிவது போல தெரிந்துள்ளது. அங்கே மனித உடல் எலும்பு இருந்துள்ளது. மேலும் சிறுமியின் வளையல், செருப்பு ஆகியவை அங்கு இருந்துள்ளது.
இதனை அடுத்து சிறுமி வீட்டார் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணையை தொடர்ந்தனர். அப்போது விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, பின்னர் நிலக்கரி சுரங்கத்தில் எரிக்கப்பட்டதாக தெரியவந்தது.
இதனை அடுத்து, சிறுமி குடும்பத்தார் கூறியதன் பெயரில் 3 பேரை சந்தேகத்தின் பெயரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் கூட்டத்தொடரில் சுற்றுலாத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற குரல் தற்போது தமிழக அரசியலில் மிக அதிகமாக ஒலித்து கொண்டிருக்கின்றன.…
சென்னை : 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்துள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவித்திருந்தார். இந்த…
டெல்லி : நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதியது.…