ராஜஸ்தான் மாநிலம் சிரோஹி எனும் மாவட்டத்தில் 4 வயது மிக்க ஒரு சிறுவன் தனது வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருக்கையில் அந்த தோட்டத்தில் சரிவர பராமரிக்கப்படாமல் இருந்து வந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்துவிட்டான்.
சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் உடனே வந்துவிட்டனர். பின்னர், அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு போன் செய்தனர். விரைந்து வந்த மீட்புக்குழுவினர் சிறுவனை காப்பாற்ற தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
தற்போது சிறுவன் 15 அடி ஆழத்தில் இருக்கிறான். அவனுக்கு தற்போது ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு வருகிறது. மீட்கும் நடவடிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்தில் அம்மாவட்ட ஆட்சியர் மீட்புப்பணிகளை கண்காணித்து வருகிறது.
தமிழ் நாட்டில் திருச்சி மாவட்டம் நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் சிக்கிய 2 வயது சிறுவன் சுஜீத்தை கடைசி வரை காப்பாற்ற முடியாமல் போனது தற்போதும் மனதை கணமாக்குகிறது. அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளையும் சரிவர பராமரித்து உபயோகப்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட சொல்லி மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதனையும் மீறி இவ்வாறு நடைபெறுவது வேதனைக்குரியது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…