கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்….

Default Image

கொரோனா தொற்றால் ராஜஸ்தான் மாநில முன்னாள் மந்திரி மரணம்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று இன்னமும் தனிந்த பாடில்லை. பலரை நிலைகுலைய செய்யும் இந்த பெருந்தொற்று பலரை காவுவாங்கி வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில  மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும்,  3 முறை எம்.எல்.ஏ. ஆகவும், 2 முறை மாநில மந்திரி சபையில் மந்திரியாகவும் இடம் பெற்றுள்ளார் திருமதி. சாகியா இனாம். இவர் ராஜஸ்தானில் 3முறை எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் மந்திரியான இவர் சில நாட்களுக்கு முன்பு, மூச்சுத்திணறல் பாதிப்பால் ராஜஸ்தான் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தீவிர சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மாலை மரணம் அடைந்தார். இவருக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்