மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றுவதற்கு ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு நிறைவு…, பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு..!

Published by
Rebekal

மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் மத வழிபாட்டுத்தலங்கள் ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஒலிக்கும் பட்சத்தில் அந்த மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல் சத்தமாக ஒலிக்கப்கப்படும் என  கூறியிருந்தார்.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இது குறித்து பேசிய அவர், மசூதிகளில் மே 3ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என காலக்கெடு கொடுத்திருந்தார். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே ஒன்றாம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் புதன்கிழமை மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் எல்லாம் அகற்றப்படாத பட்சத்தில் மசூதிகளுக்கு வெளியே ஹனுமான் பாடல் ரெட்டை ஒலியில் ஒலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து உலவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நேற்றுடன் ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததால் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மசூதிக்கு வெளியே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Recent Posts

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

விராட்- படிக்கல் அதிரடி! பஞ்சாப் அணிக்கு வெற்றி பதிலடி கொடுத்த பெங்களூர்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…

11 hours ago

மல்லை சத்யாவுடன் சமரசம்! ராஜினாமா முடிவை திரும்ப பெற்ற துரை வைகோ!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …

12 hours ago

பந்துவீச்சில் மாஸ் காட்டிய பெங்களூர்! திணறிய பஞ்சாப்..டார்கெட் இது தான்!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

12 hours ago

வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள்! மல்லை சத்யா பேச்சு!

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…

13 hours ago

டிஜிட்டல் கற்பழிப்பு! ஐசியுவில் விமான பணிப்பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்?

ஹரியானா : மாநிலம் குருகிராமில்  கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…

14 hours ago

பஞ்சாப்க்கு பதிலடி கொடுக்குமா பெங்களூர்? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago