மகாராஷ்டிரா மசூதிகளில் ஒலிபெருக்கிகள் அகற்றுவதற்கு ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு நிறைவு…, பலப்படுத்தப்பட்ட போலீஸ் பாதுகாப்பு..!

Default Image

மகாராஷ்டிரா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களிலும் மத வழிபாட்டுத்தலங்கள் ஒலிபெருக்கிகள் தொடர்பான சர்ச்சை கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மசூதிகளில் ஒலிபெருக்கிகள் ஒலிக்கும் பட்சத்தில் அந்த மசூதிக்கு வெளியில் ஹனுமான் பாடல் சத்தமாக ஒலிக்கப்கப்படும் என  கூறியிருந்தார்.

மேலும், கடந்த சில தினங்களுக்கு முன்பதாக இது குறித்து பேசிய அவர், மசூதிகளில் மே 3ம் தேதிக்குள் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என காலக்கெடு கொடுத்திருந்தார். மேலும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதாவது மே ஒன்றாம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் புதன்கிழமை மசூதிகளில் உள்ள ஒலிபெருக்கிகள் எல்லாம் அகற்றப்படாத பட்சத்தில் மசூதிகளுக்கு வெளியே ஹனுமான் பாடல் ரெட்டை ஒலியில் ஒலிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து உலவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் நேற்றுடன் ராஜ் தாக்கரே கொடுத்த காலக்கெடு முடிவடைந்ததால் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மசூதிக்கு வெளியே அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 17042025
BJP Former state leader Annamalai - TN Minister Sekarbabu
edappadi and amit shah Nainar Nagendran
ADMK MP Thambidurai say about ADMK - BJP Alliance
d jeyakumar about bjp
Mitchell Starc About RR
gold price today