#தேர்தல் தாக்கு:35 ஆண்டுக்கால_வழக்கு:11 போலீசார்க்கு ஆயுள்தண்டனை!

Published by
kavitha

35 ஆண்டிற்கும் மேலாக நடந்து ராஜ்மான்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் சுட்டுக்கொன்ற வழக்கில் 11 போலீசார் உள்பட 18 பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 1985 ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது.அப்போது ஆளும் கட்சியாக  காங்கிரஸ் கட்சி இருந்தது.மேலும் காங்.,தலைமையில் முதல்வரான சிவசரன் மாத்தூர் மீண்டும் ராஜஸ்தான் மாநில முதல்வராக தேர்தலில் நின்றார்.

இத்தேர்தலில் மாநிலத்தின் டீக் என்ற பகுதியை சேர்ந்தவர் ராஜா மன் சிங் என்பவரும் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வருக்கான பிரசார வாகனத்தை ராஜா மன்சிங் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து இருவரின் ஆதரவாளர்கள் இடையே தேர்தல்  நேரத்தில் கடும் பகை உருவானது . இந்நிலையில் தேர்தல் முடிந்த  மறுநாள் டீக் பகுதியில் உள்ள வேளாண் சந்தையில் மோதல் நடந்து உள்ளது. இந்தமோதலில் ராஜா மான்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்களை ராஜஸ்தான் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

அப்பொழுது ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 11 போலீசார் உள்ளிட்ட 18 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் வழக்கு  நடந்து கொண்டிக்கும் போது 3 பேர் காலமாயினர்.

மற்ற 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இதில் மீதமிருந்த 11 போலீசார் மீதான வழக்கு சுமார் 35 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில்  தற்போது வழக்கின் குற்றவாளிகளான 11 போலீசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தற்போது 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும்  ராஜா மன்சிங் 1952 ம் ஆண்டில் இருந்து 1984ம் ஆண்டு வரையில் தொடர்ந்து சுயேட்சை எம்.எல்.ஏவாக  இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

RRvRCB : மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய பெங்களூரு! ராஜஸ்தானை வீழ்த்தி RCB அபார வெற்றி!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

10 hours ago

ஆளுநர் விவகாரம் : “உச்சநீதிமன்றம் வரம்பு மீறுகிறது!” கேரளா ஆளுநர் கடும் விமர்சனம்!

திருவனந்தபுரம் : தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலம் தாழ்த்துகிறார், அரசியலமைப்பு சட்ட…

11 hours ago

RRvRCB : இதுதான் டார்கெட்! பெங்களூரு வெற்றிக்கு 174 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் : இன்றைய ஐபிஎல் தொடரின் ஆட்டத்தில் சஞ்சு தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல்…

11 hours ago

RRvRCB : வெற்றிப் பாதைக்கு திரும்ப போவது யார்? RCB ஃபீல்டிங்.! RR பேட்டிங்!

ஜெய்ப்பூர் : இன்று (ஏப்ரல் 13) ஐபிஎல் 2025-ல் 28வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் , ராயல்…

13 hours ago

“என்னை சுட்டுப்பிடிக்க உத்தரவா.?” பதறிய வரிச்சியூர் செல்வம்., பரபரப்பு பேட்டி!

மதுரை : கோவை போலீசார் இன்று ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்ததாக செய்திகள் வெளியாகின. அதில், மதுரையை சேர்ந்த ரவுடி…

14 hours ago

“நான் துணை முதலமைச்சரா.?” பதறிப்போன செல்வப்பெருந்தகை! 15 நாட்கள் கெடு உத்தரவு!

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி ஆட்சி தான். ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு போன்ற கோரிக்கைகள் தமிழக…

15 hours ago