டெல்லியில் வார இறுதி நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவித்த இந்திய வானிலை மையத்தின் முன்னறிவிப்பு தலைவர் குல்தீப் ஸ்ரீவாஸ்தவா, டெல்லியில் வரும் வியாழக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 30 மற்றும் 31 ஆகிய நாட்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இது வார இறுதி நாட்களில் தீவிர மழையாக மாற வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கான மழை அளவு இன்னும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், ஸ்கைமேட் வெதர் என்ற தனியார் வானிலை அறிவிப்பின் துணைத்தலைவர் மகேஷ் பலவட் கூறுகையில், டெல்லியில் வழக்கத்தை விட தாமதமாக தொடங்கினாலும் ஜூலை மாத மழை அதிகமாக உள்ளது. இதனால் ஏற்கனவே டெல்லியில் 200% மழை பெய்துள்ளது.
மாதம் முடிவடையும் நாட்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் வடக்கு வங்காள விரிகுடாவில் ஒரு குறைந்த அழுத்த பகுதி உருவாகியிருப்பதாகவும் இதனால் டெல்லியின் அண்டை மாநிலங்களில் வரும் நாட்களில் கடுமையான மழை பெய்யும் என்று தெரிவித்தார்.
கலிபோர்னியா : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் விண்கலம்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…