நிதியமைச்சரின் அதிரடி அறிவிப்புகள்- ராகுல் காந்தி பாராட்டு

Default Image

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 16  பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டினுள் இருந்து வருகின்றனர்.

கொலைக்கார வைரஸால் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும்  இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.இந்நிலையில் கொரோனா பாதிப்புக்காக மத்திய அரசு அறிவித்துள்ள நிவாரணத்திட்டங்களுக்கு ராகுல்காந்தி பாராட்டு தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சரியான திசையில் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை என்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், தினக்கூலி தொழிலாளிகள் ஆகியோருக்கு நாடு கடன்பட்டுள்ளது என்று பதிவிட்டு பதிவிட்டு உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்