டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் , தேர்தல்களில் வாக்குப் பதிவு எந்திரத்திற்கு பதில் மீண்டும் வாக்குச் சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் 84ஆவது முழு அளவிலான இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கியது. இதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, தேசிய மற்றும் மாநில தலைவர்கள், காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 15 ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இம்முறை, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து சிறப்பு பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர். ராகுல் காந்தி கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முழு அளவிலான இந்த மாநாட்டில், அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல், அடுத்த 5 ஆண்டுகளுக்கான செயல் திட்டங்கள் ஆகிய தலைப்புகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அடுத்தாண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை தோற்கடிப்பதற்காக, தங்கள் கருத்தோடு ஒத்துப்போகும் கட்சிகளோடு, நல்லுறவை ஏற்படுத்தி, ஒருங்கிணைந்து செயல்படுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஒரே சமயத்தில், நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்துவது என்ற மத்திய அரசின் முடிவை ஏற்க முடியாது என்றும், இனிவரும் தேர்தல்களில், வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக, வாக்குச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும் என்றும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2019ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, மத்திய பாஜக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும், காங்கிரஸ் மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக சென்னையில் பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 'பிங்க் ஆட்டோ' சென்னை…
டெல்லி : ஜெர்மனியின் கார் தயாரிப்பு நிறுவனமான மெர்ஸிடஸ் பென்ஸ் (Mercedes-Benz) AMG G 63 எனும் புதிய வகை…
சிட்னி : இந்தியா மற்றும் ஆஸ்ரேலியா இரண்டு அணிகளும் வருடம்தோறும் மோதிக்கொள்ளும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரான (பார்டர்-கவாஸ்கர் டிராபி) தொடர் இந்த…
கசான் : ரஷ்யா, தென்னாப்பிர்க்கா, சீனா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பின் மாநாடு 16வது உச்சிமாநாடு…
டெல்லி : வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் நாளை காலை கிழக்கு மத்திய…
நாமக்கல் : அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முதல்வர் மு.க.…