மோடிஜி இந்தியாவின் ஆன்மாவை கிராமங்களில் தேடுங்கள் – ராகுல் காட்டம்

Default Image

இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று ராகுல் காட்டமாக தெரிவித்துள்ளார்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை, விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ள ராகுல் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ் தொடர்ந்து ஈடுபடும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில்: இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் தான் உள்ளது என்பதை பிரதமர் மோடி புரிந்து கொள்ள வேண்டும். காங்கிரஸ்  ஆட்சியில் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தாமல் எந்த வேளாண் சட்டத்தையும் அமல்படுத்தியது  கிடையாது. ஆனால் இந்த மோடி அரசு  விவசாயிகளிடம்  ஆலோசிக்காமல், பெரும் முதலாளிகளுடன் ஆலோசித்து சட்டங்களை எல்லாம் அமல்படுத்துகிறது.வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை விவசாயிகளுடன் இணைந்து காங்கிரஸ் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடும். என்று தெரிவித்துள்ள அவர் வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய போராட்டத்தில் காங்கிரஸ்  ஈடுபடும் என்று கூறியுள்ளார்.


 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்